Title of the document
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் ,தொட்டியபட்டி , ஊ.ஒ.தொ. பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு பள்ளியின் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. கொரோனா தொற்றுநோய் காரணமாக , வேலையின்மையால் அவதிப்படுவதாக பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பள்ளியில் பயிலும் 69 மாணவர்களின் பெற்றோர்களுக்கும் , அரிசி, பருப்பு உள்ளிட்ட 9 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய பை ஒன்றும், காய்கறிகள் உள்ளிட்ட பை ஒன்றும் , கைகழுவ சோப்கள், மற்றும் மாஸ்க்குகள் , மாணவ மாணவிகளுக்காக பிஸ்கெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட ரூ 32,500 மதிப்புள்ள பொருட்களை ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி கரூர் அவர்களால் வழங்கப்பட்டது. 


தலைவர் திரு சூரியநாராயணா, பெரியசாமி , தினேஷ், பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழங்கினார்கள், விழாவில் சமூக இடைவெளியுடன் பெற்றோர்களை நிற்க வைத்து , கைகளை சுத்தம் செய்ய சனிடை சர் போடப்பட்டு மாஸ்க் அணிவிக்கப்பட்டு, பள்ளியன் தலைமையாசிரியர் கோ. மூர்த்தி விழாவை ஏற்பாடு செய்து கொரோனா தொற்று விழிப்புணர்வு உரையாற்றினார்.விழாவில் கவுன்சிலர் இளங்கோ, சிவசுப்பிரமணியம், கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.>
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post