கரோனாவுக்கு தடுப்பு மருந்து: இஸ்ரேல் அறிவிப்பு 
 இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சிக் கூடத்தில், கரோனா வைரஸ் 
தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ள தாக அரசு அறிவித்துள்ளது. இது கரோனா தொற்று
 நோய்க்கு சாத்தியமான சிகிச்சையை நோக்கிய குறிப்பிடத் தக்க முன்னேற்றம் 
என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் நப்தாலி பென்னட் தெரிவித்தார். 
 அமைச்சர் நப்தாலி பென்னட், பாது காப்பு உயிரியல் ஆராய்ச்சிக் கூடத்தை 
நேற்று பார்வையிட்டார். அப்போது அங்கு கரோனா வைரஸுக்கு மருந்தைக் கண்டு 
பிடிப்பதில் அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து அவருக்கு 
விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த சாதனைக்காக ஆராய்ச்சியாளர் களை அமைச்சர் பென்னட் பாராட்டினார். 
அப்போது அவர் கூறும்போது, ‘‘இந்த சிறப்பான முன்னேற்றத்துக்குக் காரணமான 
நிறுவன ஊழியர்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அவர்களின் படைப்பாற்றல் 
மற்றும் யூத மனம் இந்த அற்புதமான சாதனையை கொண்டு வந்தது. அவர்களுக்கு எனது 
பாராட்டுக்கள்’’ என்றார். 
 
பின்னர் பென்னட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச் சிக்கான இஸ்ரேல் நிறுவனமான (ஐஐபிஆர்)-ல் 
உருவாக்கப்பட்ட மோனோக்ளோனல் நியூட்ராலைசிங் ஆன்டிபாடி எனப்படும் கரோனா 
வைரஸ் தடுப்பு மருந்தால் நோயாளிகளின் உடலுக்குள் நோயை உருவாக்கும் கரோனா 
வைரஸை அழிக்க முடியும். 
இது கரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் 
குறிப்பிடத் தகுந்த முன்னேற்றமாகும்.
இந்த தடுப்பு மருந்தின் காப்புரி மைக்கு விண்ணப்பித்துள்ளோம். அது கிடைத்த 
பிறகு சர்வதேச உற்பத்தி யாளர்கள் அதை பெருமளவில் உற்பத்தி செய்ய 
முற்படுவார்கள் என்று நம்புகிறேன். 
தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக் கும் முயற்சி முழுமை அடைந்துள் ளது மிகவும் 
மகிழ்ச்சி அளிக்கிறது. காப்புரிமை கிடைத்த பின்னர் அதை வர்த்தகத்துக்குக் 
கொண்டு வருவோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
 
 கடந்த பிப்ரவரி 1-ம் தேதி, கரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் 
கண்டுபிடிக்குமாறு ஐஐபிஆர் விஞ் ஞானிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் 
நேதன்யாகு உத்தரவிட் டிருந்தார்.
அதன்படி இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கரோனா வைரஸ் 
நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள், கப்பல்கள் மூலம் இஸ்ரேலுக்கு 
கொண்டு வரப்பட்டு ஆய்வுகள் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment