Title of the document
சென்னை: வனப்பாதுகாவலர் தேர்வுக்கு பிந்தைய நடைமுறைகள், மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக, வனத்துறை அறிவித்துள்ளது.
வனத்துறையில், 320 வனப்பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான, &'ஆன்லைன்&' தேர்வு, மார்ச், 8ல் நடந்தது. இதில், 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 

இவர்களுக்கான தேர்வு முடிவுகள், தேர்வுக்கு பிந்தைய சான்றிதழ் சரி பார்ப்பு, உடல் திறன் தேர்வு ஆகியவை, ஏப்., - மே மாதங்களில் நடத்தப்பட இருந்தன. கொரோனா தொற்று காரணமாக, இவை நடத்தப்படவில்லை. இந்நிலையில், வனப்பாதுகாவலர் தேர்வுக்கு பிந்தைய நடைமுறைகள், மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, வனத்துறை அறிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post