Title of the document
இந்தியாவில் ஊரடங்கிற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி முதல் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை-காட்பாடி ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முன்னதாக தமிழகத்திற்கு, குளிர்சாதன வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்று ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post