Title of the document
தமிழக மாணவர்கள் புத்திசாலிகள் - மாண்புமிகு கல்வி அமைச்சர் பாராட்டு
கோபி:''தமிழக பள்ளி மாணவ - மாணவியர் புத்திசாலிகள்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்,செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வரும் கல்வியாண்டில், தலா, 50, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்; 35 நடுநிலைப் பள்ளிகள்; 30 துவக்கப் பள்ளிகளை தரம் உயர்த்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
இதன் மூலம், இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். கொரோனா விலகிய பின், இதற்கான பணிகள் துவங்கும். அனைத்து வகுப்புக்கும், பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி, தீவிரமாக நடக்கிறது. 
மாணவ - மாணவியருக்கு வழங்க வேண்டிய, 'ஷூ'க்கள், தயார் நிலையில் உள்ளன. 'ஆன்லைன்' மூலம் படிக்கும் நம் தமிழக மாணவர்கள், எந்த சூழ்நிலையிலும், எதற்கும் தயாராக உள்ளனர்; புத்திசாலிகளாக விளங்குகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post