Title of the document
மத்திய அரசு நடத்தும், பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது; மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

இந்நிலையில், தேசிய தேர்வு முகமை அறிவித்த பல்வேறு தேர்வுகளுக்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கான, என்.சி.ஹெச்.எம்., நுழைவு தேர்வு; இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையின், பிஎச்.டி., நுழைவுதேர்வு; இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வு, ஜவஹர்லால் நேரு பல்கலை நுழைவு தேர்வு போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கவும், ஏப்ரல், 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கல்லுாரி பேராசிரியர் பணிக்கான, நெட் தேர்வு, மே, 16; சி.எஸ்.ஐ.ஆர்., தேசிய தகுதி தேர்வு, மே, 15; ஆயுஷ் முதுநிலை தேர்வு, மே, 31 என, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post