Title of the document
File Copy
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 27ஆம் தேதி தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இதனால் தேர்வு ரத்து செய்ய வில்லை, ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என தமிழக அரசு தெரிவித்தது. மே 3ஆம் தேதி பிறகு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இந்நிலையில் மாணவ - மாணவிகள் பாடங்களை எளிதில் சென்றடையும் வகையில் தூர்தர்ஷன் (டிடி) தொலைக்காட்சியில் புதன்கிழமை (இன்று) முதல் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் ஏற்கனவே தாங்கள் படித்த பாடத்தை மீண்டும் எழுதி கற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post