Title of the document
 தேவைப்பட்டால் கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்களா?




ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 4 பேர்தான் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.




கொரோனா தடுப்பு பணியில் தேவைப்பட்டால் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள். மேலும் 29-ந் தேதிக்கு பிறகு முதல்-அமைச்சர் மற்றும் உயர்மட்ட குழுவின் ஆலோசனை பெறப்பட்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடத்தப்படும்.

மேலும் நடந்து முடிந்த பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள், சிறு வியாபாரிகளுக்கு சிறு கடன்கள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. அதற்காக இப்பகுதியில் உள்ள மாவட்ட வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கருத்துரைகள் கேட்கப்பட்டுள்ளது.




அதில் அவர்கள் மாத தவணை செலுத்தும் தொகை 6 மாத காலத்திற்கு பின்பு செலுத்துமாறு செய்யப்படும். நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 ஊராட்சிகள் உள்ளன. இதில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அருகே உள்ள 5 ஊராட்சிகளில் பணிகள் தொடங்கப்படவில்லை. மீதமுள்ள 10 ஊராட்சிகளில் பணிகள் தொடங்கப்படும். இதில் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் முதியவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post