Title of the document
பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எதுவும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.பிளஸ் 1 வகுப்பில் மீதமுள்ள பாடங்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 4 முதல் தொடங்க உள்ள தாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.




இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம். விடைத்தாள் திருத் தும் பணி தொடர்பான அறிவிப்பு ஊரடங்கு முடிந்த பின்னரே வெளியிடப்படும்’’என்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post