Title of the document

 சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்லேரிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் தலைமை ஆசிரியை அமுதா தலைமையில் நடைபெற்றது. இதில் ஜே.ஆர்.சி அமைப்பு சார்பில்  ஆசிரியர் ஜோசப் ராஜ்  கொரோனா வைரஸ் பரவும் முறைகளையும் அதனை எவ்வாறு தடுப்பது எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது என்பதை மாணவர்களுக்கு விரிவாக விளக்கிக் கூறினார் மேலும் கைகழுவும் முறைகளை மாணவர்களுக்கு செயல்விளக்கம் மூலம் ஜே.ஆர்.சி மாணவர்கள்  செய்து காண்பித்தனர் மேலும் கைகுலுக்கக் கூடாது  , தும்மல் வந்தால் எப்படி தும்முவது போன்ற முறைகளை செயல்விளக்கம் மூலம் செய்து காண்பித்தனர் பிறகு எல்சிடி, ப்ரொஜெக்டர் வாயிலாக தமிழக அரசு வெளியிட்ட கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறும்படத்தை மாணவர்களுக்கு ஒளிபரப்பு செய்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இதில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு  விழிப்புணர்வு பெற்றனர் மேலும் இந்த செய்தியினை தங்களது பெற்றோர்களுக்கு தெரிவிக்குமாறு ஆசிரியர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post