![Screenshot_20200316_163732 Screenshot_20200316_163732](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_-dHKDEek3pfnqgHfqaYqnh49Z2Hij4hdJOCb2Y96REQ8bunpU8rm6r8b8RN4Txi4fmtN257XZkXzAj9pxSpR2aQE_uvxX9rhO2o0-RVvlSd_CMOId5B2Iguf_VlD4c_VOA9F2TQOG-JC/s640/Screenshot_20200316_163732.jpg)
![Screenshot_20200316_163751 Screenshot_20200316_163751](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF09Df-Tr4IWL7g8u7SB7SAzmQ9c19HX5lBN6E_BC5NnMWvcpa8SXOFhNiUkKahHdaERALFpJF8xe6LCg5MYFeb6qQWWEQ6xn3MdAcCKaUOJytoZXGHIKlywKiPiP-lWLnXZOALv2BPbx0/s640/Screenshot_20200316_163751.jpg)
அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது . அச்செயல்முறைகளில் , 03 . 05 . 2020 - ல் நடைபெறவுள்ள நீட் தேர்வினை எழுதுவதற்கு இணையதளம் வாயிலாக 02122019 முதல் 31122019 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கும் பொருட்டு அனைத்துமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் நிர்வாக வரம்புக்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய சுற்றறிக்கை அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது .
தற்போது பார்வை - 1ல் கண்டுள்ள புதுடில்லி தேசிய தேர்வு முகமையின் 13 . 03 . 2020 நாளிட்ட பொது அறிவிப்பின்படி நீட் தேர்விற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் , தங்கள் விண்ண ப்பங்களில் திருத்தம் மேற்கெள்வதற்கு 13 . 03 . 2020 முதல் 19 . 03 . 2020 ( பகல் 12 மணி வரை ) முடிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தினை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் நிர்வாக வரம்புக்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அறியும் வண்ணம் பள்ளி விளம்பரப் பலகையில் இச்செய்தியை வெளியிடுவதோடு , இறை வணக்கக் கூட்டத்திலும் அறிவிக்குமாறு தொடர்புபைய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இணைப்பு : 13 / 03 / 2020 நாளிட்ட அறிவிப்பு
Post a Comment