Title of the document


















 ஔவையார்
– ஆத்திசூடி


1


அறம்
செய
விரும்பு

பொருள்
: நீ
தருமத்தை(கடமையை)ச்
செய்ய ஆவல்
கொள்.

2

ஆறுவது
சினம்

பொருள்
: கோபம்
தணிக்கப்பட
வேண்டியதாகும்.

3

இயல்வது
கரவேல்

பொருள்
: உன்னால்
கொடுக்கக்கூடிய
பொருளை
யாசிப்பவர்க்கு
ஒளிக்காது
கொடு.

4

ஈவது
விலக்கேல்

பொருள்
: ஒருவர்
, மற்றவர்க்கு
கொடுப்பதை
, வேண்டாமென்று
தடுக்காதே

5

உடையது
விளம்பேல்

பொருள்
: உன்னிடத்திலுள்ள
பொருளை
அல்லது
இரகசியங்களை
பிறர்
அறியுமாறு
சொல்லாதே.

6

ஊக்கமது
கைவிடேல்

பொருள்
: எப்போதும்
முயற்சியைக்
கைவிடக்கூடாது.

7

எண்
எழுத்து
இகழேல்

பொருள்
: எண்ணும்
எழுத்தும்
மக்களுக்கு
இன்றியமையாதன
;
ஆகவே,
அவற்றை
வீணென்று
இகழ்ந்து
கற்காமல்
விட்டு
விடாதே.

8

ஏற்பது
இகழ்ச்சி

பொருள்
: இரந்து
வாழ்வது
இழிவானது.
அதனால்
யாசிக்கக்
கூடாது.

9

ஐயம்
இட்டு உண்

பொருள்
: யாசிப்பவர்கட்கு
கொடுத்து
பிறகு உண்ண
வேண்டும்.

10

ஒப்புரவு
ஒழுகு

உலக
நடையை
அறிந்துகொண்டு
,
அத்தோடு
பொருந்துமாறு
நடந்துகொள்.

11

ஓதுவது
ஒழியேல்

பொருள்
: நல்ல
நூல்களை
எப்பொழுதும்
படித்துக்கொண்டிரு

12

ஔவியம்
பேசேல்

பொருள்
: ஒருவரிடமும்
பொறாமை
கொண்டு
பேசாதே.

13

அஃகஞ்
சுருக்கேல்

பொருள்
: அதிக
இலாபத்துக்காக
,
தானியங்களை
குறைத்து
அளந்து
விற்காதே.

14

கண்டொன்று
சொல்லேல்.

பொருள்
: கண்ணாற்
கண்டதற்கு
மாறாகப்(பொய்
சாட்சி) சொல்லாதே

15

ஙப்
போல் வளை.

பொருள்
:
''
என்னும்
எழுத்தானது
எப்படி தான்
பயன்னுள்ளதாக
இருந்து தன்
வருக்க
எழுதுக்களை
தழுவுகிறதோ
அது போல
நாமும்
நம்மைச்
சார்ந்தவர்களால்
என்ன பயன்
என்று
பாராமல்
அவர்களை
காக்க
வேண்டும்.

"ங"
என்னும்
எழுத்தை
கூர்ந்து
நோக்கினால்
,
ஒருவர்
வளைந்து
வணக்கம்
சொல்வது
போல் உள்ளது
விளங்கும்.
அதைப்போல பணிவாக
பெரியவர்
முன் வளைய
வேண்டும்
என்று ஔவை
உரைத்ததாகவும்
எடுத்துக்கொள்ளலாம்.

16

சனி
நீராடு.

பொருள்
: சனி(குளிர்ந்த)
நீராடு.

17

ஞயம்பட
உரை.

பொருள்
: கேட்பவருக்கு
இன்பம்
உண்டாகும்
படி இனிமையாகப்
பேசு

18

இடம்பட
வீடு எடேல்.

பொருள்
: உன்
தேவைக்கு
மேல் வீட்டை
பெரிதாக
கட்டாதே.

19

இணக்கம்
அறிந்து
இணங்கு.

பொருள்
: ஒருவரிடம்
நட்பு
கொள்ளும்
முன்
,அவர்
நல்ல
குணங்களும்
,நல்ல
செய்கைகளும்
கொண்டவரா
எனத்
தெரிந்த பிறகு
அவருடன்
நட்பு
கொள்ளவும்.

20

தந்தை
தாய்ப் பேண்.

பொருள்
: உன்
தந்தையையும்
தாயையும்
அவர்களுடைய
முதுமைக்
காலம் வரை
அன்புடன்
காப்பாற்று.

21

நன்றி
மறவேல்.

பொருள்
: ஒருவர்
உனக்கு
செய்த
உதவியை ஒரு
போதும் மறவாதே

22

பருவத்தே
பயிர் செய்.

எச்செயலையும்
அதற்குரிய
காலத்திலேயே
செய்ய
வேண்டும்

23

மண்
பறித்து
உண்ணேல்.

பொருள்
: பிறர்
நிலத்தை
திருடி அதன்
மூலம்
வாழாதே

24

இயல்பு
அலாதன
செய்யேல்.

பொருள்
: நல்லொழுக்கத்துக்கு
மாறான
செயல்களைச்
செய்யாதே.

25

அரவம்
ஆட்டேல்.

பாம்புகளை
பிடித்து
விளையாடாதே.

26

இலவம்
பஞ்சில்
துயில்.

பொருள்
:
'இலவம்
பஞ்சு
' எனும்
ஒரு வகை
பஞ்சினால்
செய்யப்பட்ட
படுக்கையிலே
உறங்கு

27

வஞ்சகம்
பேசேல்.

பொருள்
: கபடச்(உண்மைக்கு
புறம்பான
,கவர்ச்சிகரமான)
சொற்களை
பேசாதே

28

அழகு
அலாதன
செய்யேல்.

பொருள்
: இழிவான
செயல்களை
செய்யாதே

29

இளமையில்
கல்.

பொருள்
: இளமை
பருவத்தில்
இருந்தே
கற்கவேண்டியவைகளை
(இலக்கணத்தையும்
,
கணிதத்தையும்)
தவறாமல்
கற்றுக்கொள்.

30

அறனை
மறவேல்.

பொருள்
: தருமத்தை
எப்போதும்
மறவாமல்
செய்

31

அனந்தல்
ஆடேல்.

பொருள்
: மிகுதியாக
தூங்காதே

32

கடிவது
மற

பொருள்
: யாரையும்
கோபத்தில்
கடிந்து
பேசிவிடாதே.

33

காப்பது
விரதம்

பொருள்
: தான்
செய்யத்
தொடங்கிய
தருமத்தை
விடாமல் செய்வதே
விரதமாகும்

34

கிழமை
பட வாழ்

பொருள்
: உன்
உடலாலும்
பொருளாலும்
பிறருக்கு
நன்மை செய்து
வாழ்

35

கீழ்மை
யகற்று

பொருள்
: இழிவான
குணஞ்
செயல்களை
நீக்கு

36

குணமது
கைவிடேல்

பொருள்
: நன்மை
தரக்கூடிய
நல்ல
குணங்களை
பின்பற்றுவதை
நிறுத்திவிடாதே(கைவிடேல்).

37

கூடிப்
பிரியேல்

பொருள்
: நல்லவரோடு
நட்பு
செய்து பின்
அவரை
பிரியாதே

38

கெடுப்ப
தொழி

பொருள்
: பிறருக்கு
கேடு
விளைவிக்கும்
செயல்களை செய்யாதே.

39

கேள்வி
முயல்

பொருள்
: கற்றவர்
சொல்லும்
நூற் பொருளை
கேட்பதற்கு முயற்சி
செய்

40

கைவினை
கரவேல்

பொருள்
: உங்களுக்கு
தெரிந்த
கைத்தொழிலை
மற்றவர்களிடமிருந்து
ஒளியாமற்
செய்து
கொண்டிருக்கவும்.

41

கொள்ளை
விரும்பேல்

பொருள்
: பிறர்
பொருளை
திருடுவதர்க்கு
ஆசைப்படாதே.

42

கோதாட்
டொழி

பொருள்
: குற்றமான
விளையாட்டை
விட்டு விடு
(நீக்கு)

43

கௌவை
அகற்று

பொருள்
: வாழ்வில்
செயற்கையாக
ஏற்படும்
துன்பத்தை நீக்கு

44

சக்கர
நெறி நில்

பொருள்
: தர்மசக்கர
நெறிப்படி
வாழ
வேண்டும்.
(அரசன் = ஆள்பவர்
,
தலைவர்)

45

சான்றோ
ரினத்திரு

பொருள்
: அறிவொழுக்கங்ளில்
நிறைந்த
பெரியோர்களுடன்
சேர்ந்து
இரு.

46

சித்திரம்
பேசேல்

பொருள்
: பொய்யான
வார்தைகளை
மெய் போலப்
பேசாதே

47

சீர்மை
மறவேல்

பொருள்
: புகழுக்குக்
காரணமான
நல்ல
குணங்களை
மறந்து
விடாதே.

48

சுளிக்கச்
சொல்லேல்

பொருள்
: கேட்பவருக்குக்
கோபமும்
வெறுப்பும்
உண்டாகும்
படி
பேசாதீர்

49

சூது
விரும்பேல்

பொருள்
: ஒருபொதும்
சூதாட்டத்தை
விரும்பாதே.

50

செய்வன
திருந்தச்
செய்

பொருள்
: செய்யும்
செயல்களை
தவறோ குறையோ
ஏதும் இல்லாமல்
செய்யவும்

51

சேரிடமறிந்து
சேர்

பொருள்
: நீ பழகும்
நபர்கள்
நல்ல
குணங்கள்
உடையவர்களா
என நன்கு
ஆராய்ந்து
பின்பு
அவர்களுடன்
பழகு.

52

சையெனத்
திரியேல்

பெரியோர்
'சீ'
என
வெறுக்கும்
படி
வீணாய்த்
திரியாதே

53

சொற்சோர்வு
படேல்

பொருள்
: பிறருடன்
பேசும்
பொழுது
மறந்தும்
குற்றமுண்டாகப்
பேசாதே

54

சோம்பித்
திரியேல்

பொருள்
: முயற்சியின்றிச்
சோம்பேறியாகத்
திரியாதே.

55

தக்கோ
னெனத்திரி

பொருள்
: பெரியோர்கள்
உன்னைத்
தக்கவன்
(யோக்கியன்
, நல்லவன்)
என்று
புகழும்படி
நடந்துக்கொள்

59

தானமது
விரும்பு

பொருள்
: யாசிப்பவர்களுக்கு
தானம் செய்.

60

திருமாலுக்கு
அடிமை செய்

பொருள்
: நாராயணமூர்த்திக்கு
தொண்டு செய்

61

தீவினை
யகற்று

பொருள்
: பாவச்
செயல்களைச்
செய்யாமல்
இரு.

62

துன்பத்திற்
கிடங்கொடேல்

பொருள்
: முயற்சி
செய்யும்
பொழுது
வரும்
உடம்பின் வருத்தத்திற்கு
அஞ்சி அதனை
விட்டு
விடாதே.

63

தூக்கி
வினைசெய்

பொருள்
: ஒரு வேளையை
முடிப்பதற்க்கான்
வழிமுறைகளை நன்கு
ஆராயிந்து
அறிந்து
பின்பு
அச்செயலை
செய்யத
தொடங்கவும்

64

தெய்வ
மிகழேல்

பொருள்
: கடவுளை
பழிக்காதே.

65

தேசத்தோ
டொத்துவாழ்

பொருள்
: உன்
நாட்டில்
வசிக்கும்
மக்களுடன்
பகை இல்லாமல்
வாழ்

66

தையல்சொல்
கேளேல்

பொருள்
: மனைவி சொல்
கேட்டு
ஆராயாமல்
நடவாதே.

67

தொன்மை
மறவேல்

பொருள்
: பழமையாகிய
நட்பினை
மறந்துவிடாதே.

68

தோற்பன
தொடரேல்

பொருள்
: ஒரு செயலைச்
செய்தால்
தோல்வியில்
தான் முடியும்
எனத்
தெரிந்தே
அதை
தொடங்காதே.

69

நன்மை
கடைப்பிடி

பொருள்
: நல்வினை
செய்தலை
எவ்வளவு
இடையுறு
வந்தாலும்
உறுதியாகத்
தொடரவும்

70

நாடொப்
பனசெய்

பொருள்
: நாட்டில்
உள்ள பலரும்
ஒத்துக்கொள்ளத்தக்க
நல்ல
காரியங்களை
செய்

71

நிலையிற்
பிரியேல்

பொருள்
: உன்னுடைய நல்ல
நிலையில்
இருந்து
என்றும்
தாழ்ந்து
விடாதே.

72

நீர்விளை
யாடேல்

பொருள்
: வெள்ளத்தில்
நீந்தி
விளையாடாதே

73

நுண்மை
நுகரேல்

பொருள்
: நோயைத்
தரும்
சிற்றுண்டிகளை
அதிகமாக
உண்ணாதே

74

நூல்பல
கல்

பொருள்
: அறிவை
வளர்க்கும்
பல
நூல்களைப்
படி

75

நெற்பயிர்
விளை

பொருள்
: நெற்பயிரை
விளையச்
செய்வதை உன்
வாழ்க்கை தொழிலாகக்
கொண்டு வாழ்.

76

நேர்பட
வொழுகு

பொருள்
: ஒழுக்கந்
தவறாமல்
நேர்வழியில்
நட

77

நைவினை
நணுகேல்

பொருள்
: பிறர்
வருந்தத்
தகுந்த தீ
வினைகளைச்
செய்யாதே

78

நொய்ய
வுரையேல்

பொருள்
: பயன் இல்லாத
அற்ப
வார்த்தைகளைப்
பேசாதே.

79

நோய்க்கிடங்
கொடேல்

பொருள்
: மிகுந்த
உணவு உறக்கம்
முதலியவற்றால்
நோய்க்கு
வழிவகை செய்யாதே.

80

பழிப்பன
பகரேல்

பொருள்
: பெரியோர்களால்
பழிக்கப்படும்
இழிவான சொற்களான
பொய்
,கடுஞ்சொல்
ஆகியவற்றைப்
பேசாதே.

81

பாம்பொடு
பழகேல்

பொருள்
: பாம்புபோல
கொடிய குணம்
கொண்டவர்கள்
உடன் பழகாதே.

82

பிழைபடச்
சொல்லேல்

பொருள்
: குற்றம்
உண்டாகும்
படி எதையும்
பேசாதே.

83

பீடு
பெறநில்

பொருள்
: பெறுமையை
அடையும்
படியான நல்ல
நிலையிலே நில்

84

புகழ்ந்தாரைப்
போற்றி வாழ்

பொருள்
: உன்னையே
நம்பியவர்களை
காப்பாற்றி
வாழ்

85

பூமி
திருத்தியுண்

பொருள்
: விளைநிலத்தை
உழுது அதில்
பயிர்செய்து
உண்.(அ)விவசாயத்தை
வாழ்க்கைத்
தொழிலாகக்
கொள்

86

பெரியாரைத்
துணைக்கொள்

பொருள்
: அறிவிலே
சிறந்த
பெரியோர்களை
உனக்குத்
துணையாகப்
பேணிக்கொள்

87

பேதைமை
யகற்று

அறியாமையைப்
போக்கு

88

பையலோ
டிணங்கேல்

பொருள்
: அறிவில்லாத
சிறுவனோடு
கூடித்
திரியாதே.

89

பொருடனைப்
போற்றிவாழ்

பொருள்
: பொருள்களை(செல்வம்
உட்பட)வீண்
செலவு செய்யாமற்
பாதுகாத்து
வாழ்.

90

போர்த்தொழில்
புரியேல்

பொருள்
: யாருடனும்
தேவையில்லாமல்
சண்டை
பொடுவதை ஒரு
வேலையாகச்
செய்யாதே

91

மனந்தடு
மாறேல்

பொருள்
: எதனாலும்
மனக்கலக்கம்
அடையாதே

92

மாற்றானுக்
கிடங்கொடேல்

பொருள்
: பகைவன்
உன்னை
துன்புறுத்தி
உன்னை
வெல்வதற்க்கு
இடம்
கொடுக்காதே

93

மிகைபடச்
சொல்லேல்

பொருள்
: சாதாரணமான
விஷயத்தை
மாயாஜால
வார்தைகளால்
பெரிதாகக்
கூறாதே.

94

மீதூண்
விரும்பேல்

பொருள்
: மிகுதியாக
உண்ணுதலை
விரும்பாதே.

95

முனைமுகத்து
நில்லேல்

பொருள்
: எப்போதும்
யாருடனாவது
சண்டையிடுவதற்காக
போர்
முனையிலே
நிற்காதே

96

மூர்க்கரோ
டிணங்கேல்

பொருள்
: மூர்க்க
குணம்
கொண்டவர்கள்
உடன் பழகாதே

97

மெல்லினல்லாள்
தோள்சேர்

பொருள்
: பிற மாதரை
விரும்பாமல்
உன்
மனைவியுடன்
மட்டும்
சேர்ந்து
வாழ்.

98

மேன்மக்கள்
சொற்கேள்

பொருள்
: நல்லொழுக்கம்
உடைய
பெரியோர்
சொல்லைக்
கேட்டு நட.

99

மைவிழியார்
மனையகல்

பொருள்
: விலைமாந்தர்
உடன் உறவு
கொள்ளாமல்
விலகி நில்

100

மொழிவ
தறமொழி

பொருள்
: சொல்லப்
படும்
பொருளை
சந்தேகம்
நீங்கும் படி
சொல்

101

மோகத்தை
முனி

பொருள்
: நிலையில்லாத
பொருள்களின்
மேலுள்ள
ஆசையை வெறுத்திடு

102

வல்லமை
பேசேல்

பொருள்
: உன்னுடைய
சாமர்த்தியத்தை
நீயே
புகழ்ந்து பேசாதே

103

வாதுமுற்
கூறேல்

பொருள்
: பெரியோர்களிடத்தில்
முறன் பட்டு
வாதிடாதே

104

வித்தை
விரும்பு

பொருள்
: கல்வியாகிய
நற்பொருளை
விரும்பு

105

வீடு
பெறநில்

பொருள்
: முக்தியை
பெறுவதற்கான
சன்மார்கத்திலே
வாழ்க்கையை
நடத்து

106

உத்தமனாய்
இரு

பொருள்
: உயர்ந்த
குணங்கள்
கொண்டவனாக
வாழ்.

107

ஊருடன்
கூடிவாழ்

பொருள்
: ஊராருடன்
நன்மை
தீமைகளில்
கலந்து வாழ்

108

வெட்டெனப்
பேசேல்

பொருள்
: யாருடனும்
கத்தி
வெட்டுப்
போலக்
கடினமாக பேசாதே

109

வேண்டி
வினைசெயேல்

பொருள்
: வேண்டுமென்றே
தீய
செயல்களைச்
செய்யாதே

110

வைகறை
துயிலெழு

பொருள்
: நாள்தோறும்
சூரியன்
உதிக்கும்
முன்பே தூக்கத்தில்
இருந்து
எழுந்திரு

111

ஒன்னாரைத்
தேறேல்

பகைவர்களை
நம்பாதே

112

ஓரஞ்
சொல்லேல்

பொருள்
: எந்த
வழக்கிலும்
ஒருபுடைச்
சார்பாக
பேசாமல்
நடுநிலையுடன்
பேசு.






# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post