Title of the document

விஜயதசமி நாளில், தனியார் பள்ளிகளை போல, அரசு பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உத்தரவிடப் பட்டுள்ளது.நாடு முழுவதும் இன்று, விஜயதசமி நாள் கொண்டாடப் படுகிறது.இதையொட்டி, பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை நடத்தப் படுகிறது.

 பல தனியார் பள்ளிகள், ப்ரீ கே.ஜி., மற்றும், எல்.கே.ஜி., வகுப்புகளில் மாணவர்களை, இன்று சேர்க்கின்றனர். இதற்காக சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை உயர்த்தும் வகையில், விஜயதசமி நாளில், புதிய மாணவர்களை சேர்க்குமாறு, தொடக்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை, இன்று திறந்து வைத்து, புதிய மாணவர்களை சேர்க்கலாம்.

குறிப்பாக, அங்கன்வாடிகளில் உள்ள, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் மற்றும் தொடக்க பள்ளிகளில் உள்ள, நர்சரி வகுப்புகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும் என, தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post