
தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் டிசம்பருக்குள் ஸ்மார்ட்
வகுப்பறைகள் தொடங்கப்படும் என கரூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் பேட்டியளித்தார். இந்நிலையில் 2020-ல் தனியார் பள்ளிகளைவிட
அரசுப்பள்ளிகள் சிறப்பாக செயல்படும் என தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிளஸ்-2
முடித்து வெளிவரும் மாணவர்களுக்கு சி.ஏ.படிப்புக்கு சிறப்பு பயிற்சி
அளிக்கப்படும் என கூறினார்.