Title of the document


தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2331 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது

கல்வித் தகுதி :

சம்பந்தப்பட்ட பாடத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் அது தொடர்புடைய பாடத்தில் யுஜிசி விதிமுறைகளின்படி NET / SLET / SET / SLST / CSIR / JRF தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் முனைவர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01.07.2019 அன்று அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

ரூ. 57,700 முதல் 1,82,400 வரை சம்பளம் கொடுக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

SC / ST பிரிவினர் மற்றும் மாற்று திறனாளிகளை தவிர்த்து மற்ற அனைத்து பிரிவினரும் ரூ. 600/- செலுத்த வேண்டும், SC / ST பிரிவினர் மற்றும் மாற்று திறனாளிகள் ரூ. 300 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://trb.tn.nic.in/arts_2019/NotificationNEW.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 30.10.2019
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post