Title of the document

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகிறது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி தொடங்கி , 22ஆம் தேதி வரை நடந்தது.  ஒட்டு மொத்தமாக 7 ஆயிரத்து 278  பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து16 ஆயிரத்து 618  மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்.

சென்னை மாநகரில் மட்டும் 156 மையங்களில் 47 ஆயிரத்து 305 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாற்றுத் திறனாளி மாணவர்கள் 2 ஆயிரத்து 700 பேர், சிறைவாசிகள் 78 பேரும்11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்றனர். இதற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகிறது என அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தேர்வுத்துறை இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்க்கலாம் என தெரிவித்துள்ளது. 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post