Title of the document

அரசு பள்ளி மாணவர்களுக்கு  இலவச ஆங்கில பயிற்சி

*ஆங்கிலம் என்றாலே அலறும் மாணவர்களை 15 நாட்களில் ஆங்கிலம் பேசவும்எழுத வைக்கும் மேலூர் சமூக சேவகர் முரளிதர சந்திரசேகரனை 60, கல்வி அதிகாரிகள் பாராட்டினர்*

*முரளிதர சந்திரசேகரன் எம்.எஸ்.சி., எம்.பில்., அமைதி விஞ்ஞானம் முடித்து, பால் பண்ணை நடத்தினார். கிராமப்புற மாணவர்கள் ஆங்கிலம் படிக்க முடியாமல் கல்வியை நிறுத்துவதை கண்டு வருந்தினார்*

*பண்ணையை மூடி விட்டு கிராமங்களில் அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலம் கற்று கொடுக்க துவங்கினார்*

*இவரிடம் ஆங்கிலம் கற்றவர்கள் சென்னை தலைமையகம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரிகின்றனர். முரளிதர சந்திரசேகரன் கூறியதாவது*

*அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் வீதம் 15 நாட்களில் 12 வகையான வினை, துணை விணை சொற்களை பயன்படுத்தி ஆங்கிலத்தில் வார்த்தைகளை உருவாக்கி பிழையின்றி எழுத, பேச கற்று கொடுக்கிறேன்*

*மாலை நேரங்களில் ஆங்கில மையம் மூலம் குறைந்த கட்டணத்தில் ஆங்கிலம் கற்று கொடுக்கிறேன்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post