Title of the document
திருவாரூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டத் திருவிழா ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் ஏப்.1-ம் தேதி நடைபெறுவதையொட்டி, திருவாரூர் மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஏப்ரல் 20-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. அத்துடன் உள்ளூர் விடுமுறையான ஏப்ரல் 1-ஆம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், மாவட்டத்திலுள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post