Title of the document


5 சிறுவர்கள் செல்போன் இல்லாமல் காலணியைக் கொண்டு செல்ஃபி எடுப்பதுபோல் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது அனைவரிடத்திலும் இருக்கும் ஒரு அங்கமாகிவிட்டது. அதிலும் ஸ்மார்ட்போன் இளைஞர்களுக்கு நாடித்துடிப்பாகிவிட்டது. சுவாசிக்காமல் கூட இருக்கிறோம் ஆனால் ஸ்மார்ட்போன் இன்றி இருக்கமாட்டோம் என்று கூறு அளவிற்கு இளைஞர்கள் அதற்கு அடிமையாகிவிட்டனர் என்றால் அது மிகைப்படுத்தி கூறுவது அல்ல. அந்த அளவிற்கு அவர்களது எண்ணங்களோடு ஸ்மார்ட்போன் கலந்துவிட்டது. பொழுது விடிந்தால் தொடங்கும் ஸ்மார்ட்போன் பொழுதுபோக்கு, கழிவறை முதல் இரவு படுக்கை விரிப்புக்குள் கண் மூடும் வரை தொடர்கிறது.


விழாக்கள் என்றால் முன்பெல்லாம் மக்கள் கூடி மகிழ்வதை பார்க்க முடியும். ஆனால் இன்று அனைத்து விழாக்களிலும் மக்கள் கூடினாலும் அவர்களது மனம் கூடுவதில்லை. அவர்கள் கூட்டத்தில் இருந்தாலும் செல்போனை வைத்துக்கொண்டு தனிமையாக உள்ளனர். முன்பெல்லாம் சாலையில் ஒருவர் விபத்துக்குள்ளானாலோ அல்லது தடுமாறி விழுந்தாலோ உடனே சிலர் ஓடி வந்து தூக்குவார்கள். ஆனால் இன்று முதலில் செல்போனில் அதனை வீடியோவாக பதிவு செய்கிறார்கள். குறைகளை மட்டுமே கூறுவதாக எண்ண வேண்டாம். குற்றங்களை படம்பிடிக்க, நல்ல விஷயங்களைக் கூற, அழகிய புகைப்படங்கள் எடுக்க என செல்போன் பயன்பட்டாலும், இவற்றையெல்லாம் விட அதிகம் குறைகள் தான்.
கூட்டாக வாழும் குடும்பத்தை ஒரே வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்தி விடுகின்றன இந்த ஸ்மார்ட்போன்கள். தாய் ஒருபுறம், தந்தை ஒருபுறம், குழந்தை ஒருபுறம் என ஆளுக்கொரு ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு நேரத்தை வீணடிக்கின்றார்கள். பள்ளிக்கு செல்வதற்கு முன்பே ஒரு குழந்தை ஸ்மார்ட்போனை கேட்டு அடம்பிடிக்கும் கலாச்சாரத்திற்குள் நாம் விழுந்துவிட்டோம். அந்த ஸ்மார்ட்போன் அந்தக் குழந்தையின் மூளையை மழுங்கச் செய்வதுடன், அதனை எப்போது கவனச்சிறதல் கொண்ட குழந்தையாக மாற்றிவிடும் எனக்கூறுகின்றனர் மருத்துவர்கள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post