Title of the document
பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

அதன்படி, தேர்வு நடைபெறும் நாட்கள்:- 10 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 6-ல் தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெறும். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1-ல் தொடங்கி மார்ச் 19-ம் தேதி வரை நடைபெறும் மேலும் தகவலுக்கு அட்டவணையை பார்க்கவும். ​

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் நாட்கள்:- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவு 29.4.2019 அன்று வெளிவிடப்படும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவு 19.4.2019 அன்று வெளியிடப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 19.4.2019 அன்று வெளியிடப்படும் இந்நிலையில், தமிழக அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளுக்கு வரும் மார்ச் மாதம் 14,18,20,22 ஆகிய 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post