
தற்காலத்தில் அனைத்து பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்கவைக்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கல்வித்திறனை உயர்த்தவும், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் அரசுப்பள்ளிகளில் புதிய கல்விமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளான எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் எல்.கே.ஜி. வகுப்புகளில் பல குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். இதனை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று காலை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இது தவிர தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய-நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
Post a Comment