Title of the document


பள்ளி கல்வியில், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான போட்டி தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களில், 50 சதவீதம், பதவி உயர்விலும்; 50 சதவீதம், நேரடி போட்டி தேர்வு வழியாகவும் நியமிக்கப்படுகின்றனர்.இதன்படி, தற்போது காலியாக உள்ள, 18 டி.இ.ஓ., பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பின்படி, மார்ச், 2ல் முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. இந்த தேர்வின் வழியாக, நேரடியாக, 14 பேரும், அரசு உதவி பெறும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், நான்கு பேரும் தேர்வு செய்யப்படுவர் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post