
புதுக்கோட்டை,டிச28, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்காக கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது, மார்ச்2019-இல் நடைபெறும் பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்விற்கான கால அட்டவணையில் மொழிப்பாடத்திற்கான தேர்வு நேரம் மதியம் 2.00மணி முதல் மாலை 4.45 மணி வரை மாற்றப்பட்டுள்ளது.வருகிற 04-01-2019அன்று சமக்ரசிக்ஷா ரெமிடியல் டீச்சிங் 9-ஆம் வகுப்பிற்கு நடைபெறும் ஆங்கில பாடத்திற்கான குறைதீர்கற்றல் முன்னறித்தேர்வினை சிறப்பான முறையில் நடைபெறுதற்குரிய ஏற்பாட்டினை செய்யவேண்டும்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் சார்பாக வருகிற 08-01-2019அன்று புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக்பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்களின் படைப்புகளை பங்கேற்க செய்யவேண்டும். நீட்,ஜே.இ.இ வகுப்புகள் பயிற்சி மையங்களில் திறம்பட நடத்தப்படவேண்டும்.பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் பயிற்சியை ஒருங்கிணைத்து கருத்தாளர்களுடன் தொடர்புகொண்டு பயிற்சி செவ்வனே நடைபெறுவதற்கு சிறப்பான ஒத்துழைப்பு நல்கிடவேண்டும். மூன்றாம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள்,குறிப்பேடுகள், சீருடைகள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பள்ளி திறக்கும் நாளான 02-01-2019 அன்று பாடவேளையில் மாணவர்களுக்கு வழங்கி கற்றல், கற்பித்தல் பணிகளை தொடங்கவேண்டும்.2018-2019-ஆம் கல்வியாண்டிற்கான கணித உபகரணப்பெட்டி மற்றும் வண்ணக்கிரையான்களுக்கு தரச்சென்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதால் அதனை உரிய முறையில் பெற்று மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.மாணவர் விபரங்களை கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் ( EMIS-எமிஸ்) போர்க்கால அடிப்படையில் எவ்வித காலதாமதமும் செய்யாமல் பதிவுசெய்ய வேண்டும்.பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு வருகிற01-01-2019முதல் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள்

Post a Comment