Title of the document

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அவர் கூறியதாவது:பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறுவது போல் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை. 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டோம்.

அடுத்த கல்வி ஆண்டில், அங்கன்வாடி மையங்களில், 50 ஆயிரம் குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., - -யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை, இரு வண்ணங்களில் சீருடை வழங்கப்படும்.'நீட்' தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்; உணவு, தங்குமிடம் இலவசம்.இவ்வாறு அவர் கூறினார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post