Title of the document

தமிழகத்தில், 10க்கும் குறைவான மாணவர்களுடன், 1,500க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகின்றன. பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தாலும், பாடம் நடத்தாமல், ஓ.பி., அடிக்கின்றனர்.இதனால், பெரும்பாலான பெற்றோர், அரசு தொடக்கப் பள்ளிகளை கைவிட்டு, தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கின்றனர். தொடக்க பள்ளிகள் சரியாக இல்லாததால், உயர்நிலை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கை சரிகிறது. இந்த நிலையை மாற்ற, தொடக்க பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்புகளை அறிமுகம் செய்ய, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, தொடக்கப் பள்ளிகளுக்கு அருகே இருக்கும், அங்கன்வாடிகளை இணைத்து, அங்குள்ள குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., மற்றும், யு.கே.ஜி., வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், தொடக்க பள்ளிகள் அருகேயுள்ள, அங்கன்வாடிகளின் பட்டியல் மற்றும் விபரத்தை தரும்படி, தொடக்க கல்வித் துறை சார்பில், சமூக நலத்துறையிடம் கேட்கப்பட்டது.ஆனால், சமூக நலத்துறை அதிகாரிகள், அங்கன்வாடிகளின் பட்டியலை வழங்காமல், காலதாமதம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. அதேபோல, பட்டியல் கிடைத்த அங்கன்வாடிகளுக்கு சென்று, அவற்றில், எல்.கே.ஜி., வகுப்புகளை துவங்குவதற்கு, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், பள்ளி கல்வித் துறையின்,எல்.கே.ஜி., வகுப்புகளை துவங்கும் திட்டம், பாதியிலேயே முடங்கியுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post