Title of the document


சிவகங்கையில், மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்த சம்பவத்தையடுத்து, பள்ளி மாடிகளில் கம்பிவேலி அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையில் வெவ்வேறு தனியார் பள்ளிகளில் அடுத்தடுத்து இரண்டு மாணவியர் மாடியில் இருந்து குதித்தனர்.ஒரு மாணவி இறந்தார்; மற்றொரு மாணவி மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இச்சம்பவங்களால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.





இதையடுத்து 'மாடிகளில் இருந்து கீழே குதிக்க முடியாதபடி உடனடியாக கம்பிவேலி அமைக்க வேண்டும்; மொட்டை மாடிக்குச் செல்ல முடியாதபடி கதவை பூட்ட வேண்டும்' என, உத்தரவிட்டனர். மேலும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு மாணவர்களை வழிநடத்துவது குறித்து கவுன்சிலிங் நடத்தவும் முடிவு செய்தனர்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தவறு செய்தாலும் மாணவர்களை அவமானப்படுத்தும் விதமாக எச்சரிக்க கூடாதுஎன, ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளோம். பாதுகாப்பு நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அனுப்பவும் உத்தரவிட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post