பிளஸ் 1 வகுப்புக்கான பாடத்திட்டத்தின்படி பொதுத் தேர்வில் இடம் பெற உள்ள வினாத்தாளின் மாதிரி அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. முதற்கட்டமாக 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி கடந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.
பிளஸ் 1 தேர்வில் இடம் பெறும் கேள்வித்தாளில் ஒரு பகுதியில் மட்டும், மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையிலான கேள்விகள் இடம் பெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்தது. ஆனால் புளூபிரிண்ட் படிகேள்விகள் கேட்கப்படுமா என்பதற்கு தெளிவான விளக்கத்தை தேர்வுத்துறை வெளியிடவில்லை. இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். மாணவர்களின் குழப்பத்தை போக்கும் வகையில் பிளஸ் 1 கேள்வித்தாள் மாதிரியை தயாரித்து அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை அனுப்பியுள்ளது.பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அந்த மாதிரி கேள்வித்தாளை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு தெரிவித்து, தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தற்போது நடக்க உள்ள அரையாண்டுத் தேர்வுகளில் இடம் ெ்பறும் கேள்வித்தாள்கள் அனைத்தும் மேற்கண்ட மாதிரி கேள்வித்தாளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட உள்ளன.
Post a Comment