Title of the document
உடுமலை;சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், குழந்தைகளின் வாசித்தல் திறனை மேம்படுத்த, சிறப்பு வகுப்பு துவங்கியுள்ளனர்
*சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 200க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்
 *மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும், இப்பள்ளியில் பல்வேறு செயல்பாடுகளை பின்பற்றுகின்றனர்.மாணவர்களுக்கான அங்காடி, அறிவியல் படைப்புகள், ஸ்மார்ட் கிளாஸ், பள்ளித் தோட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்
*இதனால், ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது.இம்முறை மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த சிறப்பு வகுப்புகளை துவக்கியுள்ளனர்
 *பள்ளி வகுப்பு நேரம், இடைவேளைகளில், மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி அளிக்க, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இப்பள்ளியில் கூடுதல் முயற்சியாக, பள்ளி முடிந்தவுடன் வாசித்தலுக்கென சிறப்பு வகுப்பு எடுக்கின்றனர்
 *மாலையில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும், ஒன்றாக அமர்ந்து, 'தினமலர்' பட்டம் நாளிதழ் படிக்கின்றனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post