![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgni03rogPyAccS-1xsyQ2Um82OovOlKbAucqX7WrXn1GsJPjyCbvZ1uDApS9OEy7Uq7rRaBlqTdW55i6kpHWuQouIkedrYIGSMKEtEAsawWvp9ZbofK-49cBt01yClneZSj4NA1K_REiU/s200/20181108_121745.jpg)
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவிகள் அமைக்கும் பணி அரசு பள்ளிகளில் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு பள்ளிகளின் தரத்தினை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபகாலமாக பல புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
அதன் முதற்கட்டமாக நிதிப்பற்றாக்குறை காரணமாக அரசுப்பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பிறகு ஸ்டூடியோ நிறுவனம் ஆரம்பித்து அதன்மூலம் திறமையான ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படும் பாடங்களை புதிய சேனல் ஆரம்பித்து ஒளிபரப்பப்படும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தார்.
Post a Comment