அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலம் பேச ஏன் பயிற்சி அளிக்க கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆங்கில புலமை இல்லாததால் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் போட்டித்தேர்வுக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி நடத்தப்படுமா என்பதற்கு டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment