Title of the document

*லோக்சபா தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள
ஆசிரியர்களின் பட்டியலை, அனுப்ப பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
*லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதையொட்டி, பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் விபரம், எண்ணிக்கை குறித்து விபரங்களை அனுப்ப, உடுமலை கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு சுற்றிக்கை விடப்பட்டுள்ளது
*பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், தேர்தலின் போது, ஓட்டுச்சாவடி மைய அலுவலர், நிலை 1,2 அலுவலர்களாக பணியாற்றுகின்றனர்.இதற்கான விபரங்கள் சேகரிக்க, கல்வித்துறையிலிருந்து ஆசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன
*அனைத்து ஆசிரியர்களும் அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, கல்வி மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்
*மேலும், நவ., மாதத்தில், ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு நகல் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளதாக தலைமையாசிரியரின் கடித ஒப்புதலையும் சமர்ப்பிக்க வேண்டும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது
*இதன்படி, உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் பள்ளி அளவிலான கூட்டம் நடத்தி, ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post