அதேபோல, பிளஸ் 2 பொதுத் தேர்வை, பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், பிளஸ் 1 தேர்வையும் கட்டாயம் எழுத வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விதிகளை, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.இதன்படி, பிளஸ் 1 தனித் தேர்வர்கள், செய்முறை அல்லாத பாடங்களுக்கு மட்டுமே தேர்வு எழுதலாம்.
குறைந்த பட்ச வயது, 15 ஆண்டு, ஆறு மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது. எழுத்துத் தேர்வில், 90க்கு பெறும் மதிப்பெண், 100க்கு கணக்கிடப்படும்.பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பிளஸ் 2 எழுத அனுமதிக்கப்படுவர்.
ஆனால், தேர்ச்சி பெறாத பாடத்தை மீண்டும் எழுதி, தேர்ச்சி பெற்ற பிறகே சான்றிதழ் வழங்கப்படும்; அதுவரை, மதிப்பெண் பட்டியல் மட்டுமேவழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விதிகளை, அரசு தேர்வுத் துறையின், http://www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
Post a Comment