Title of the document

காலாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் உள்பட அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டுத் தேர்வுகள் கடந்த செப். 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வரை பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த விடுமுறை முடிவடைந்து புதன்கிழமை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. முதல் நாளன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2-ஆம் பருவத்துக்குரிய (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post