பள்ளி மாணவர்களுக்காக உலகளவில் சதுரங்க போட்டி நடத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோமில் உள்ள செயிண்ட் பீட்ஸ் பள்ளியில், குடியரசு தின மற்றும் பாரதியார் தின சதுரங்க போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு சதுரங்க போட்டியை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பள்ளிகளில் விளையாட்டை ஊக்குவிக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்
Post a Comment