Title of the document

'மொமோ சேலன்ஞ் கேம்' விளையாடுவதை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மொமோ சேலன்ஸ் என்ற அபாயகரமான இணையதள விளையாட்டை செல்போனில் குழந்தைகள் விளையாடுகின்றனர். இதனால் அவர்கள் மிக விபரீதமான முடிவுகளுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் உரிய முன்னெச்சரிக்கை மற்றும் தக்க அறிவுரை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post