Title of the document


சுற்றுலா பயணி அலுவலர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான நேர்காணல் 2ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு பொதுப்பணியில் அடங்கிய சுற்றுலா பயணி அலுவலர் பதவியில்(2014-2015) காலியாக உள்ள 5 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி மற்றும் 10ம் தேதி நடத்தியது. இத்தேர்வில் 210 பேர் கலந்து கொண்டனர். இதில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புக்காக சான்றிதழ்கள் பதிவேற்றத்திற்கு  தற்காலிகமாக 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
இவர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் வருகிற 2ம் தேதி நடக்கிறது. இதே போல தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாக பணியில் அடங்கிய உதவி ஆணையர் பதவியில் 3 இடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில் 7 ேபர் தற்காலிகமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேர்முக தேர்வு வருகிற 2ம் தேதி நடைபெறும். ஒருங்கிணைந்த பொறியியல் பணியில் அடங்கிய 330 பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில் 665 பேரும் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் வருகிற 25ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post