Title of the document
தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையில் வாசிப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் காலாண்டு தேர்வு விடுமுறையில் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் தலைமை ஆசிரியர் மோகன் செயல்பட்டு வருகிறார். மாணவர்கள் காலாண்டு தேர்வு விடுமுறையை பயனுள்ள வகையில் களிக்கவும், வாசிப்பு திறனை மேம்படுத்தவும் உள்ளனர். அதற்காக தன்னம்பிக்கை, இலக்கியம், அறிவியல், பொதுஅறிவு சார்ந்த புத்தகங்கள் உள்ளிட்ட 100கும் மேற்பட்ட புத்தகங்களை பெரியகுளம் தென்கரை தாலுகா கிளை நூலகர்(சில்வார்பட்டி கூடுதல் பொறுப்பு) சவடமுத்து அரசு பள்ளிக்கு வந்து மாணவர்களிடம் புத்தகங்களை வழங்கினார். மேலும் மாணவர்களிடம் வாசிப்பின் அவசியங்கள் குறித்து பேசினார். பள்ளி நூலகப் பொறுப்பாசிரியர் மகேஸ்வரி, கீழவடகரை நூலகர் ராஜகோபால் உடனிருந்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post