Title of the document
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர &'நெட்&' அல்லது, &'செட்&' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தாண்டுக்கான நெட் தேர்வை தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ., நடத்த உள்ளது. டிச., 9 முதல் 23 வரை இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு செப்., 1ல் துவங்கி, செப்., 30ல் முடிகிறது.
இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், அடையாள அட்டை எண் பதிவிட அறிவிப்பு செய்யப்பட்டது. அதில் &'ஆதார் எண்ணை பதிவிடலாம்&' என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து, தேர்வர்களால் பல்வேறு புகார்கள் கூறப்பட்ட நிலையில் &'ஆதார் கட்டாயம் இல்லை&' என என்.டி.ஏ., அறிவித்துள்ளது.
பாஸ்போர்ட் எண், வருமான வரித்துறை பான் அட்டை எண், வங்கி கணக்கு எண், ரேஷன் அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை குறிப்பிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post