கடந்த கல்வி ஆண்டு வரை, எழுத்து மற்றும், &'ஆன்லைன்&' என, இரண்டு முறைகளில் தேர்வுகள் நடந்தன. இந்த ஆண்டு, ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆண்டுக்கு, இரண்டு முறை தேர்வு நடத்தப்படுகிறது. முதல் கட்ட ஆன்லைன் தேர்வு, 2019 ஜனவரியில் நடக்க உள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவு, செப்., 1ல் துவங்கியது; வரும், 30ம் தேதி முடிகிறது.இந்த தேர்வில், அதிக மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறுவதற்கு, மாணவர்கள், சிறப்பு பயிற்சி பெற வேண்டியுள்ளது.
பல தனியார் பள்ளிகள், சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றன.தனியார் மையங்களிலும், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு, அதிக கட்டணம் என்பதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டது.எனவே, மத்திய அரசின் சார்பில், இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நாடு முழுவதும், 622 மாவட்டங்களில், 3,046 இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில், 2.72 லட்சம் பேர், ஒரே நேரத்தில் பயிற்சி பெறும் வகையில், கணினி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில், 32 மாவட்டங்களிலும், 229 இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, 34 ஆயிரம் கணினிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மத்திய அரசின், என்.டி.ஏ., இணையதளத்தில், நுழைவு தேர்வு பயிற்சிக்கான, &'வீடியோ&' பாடங்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
Post a Comment