Title of the document

1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 6 மாத ஒப்பந்த அடிப்படையில் 1474 ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர்  கழகம் நியமித்து கொள்ளலாம் என்று அரசாணை வெய்யிப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்படும் தற்காலிக முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500 தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் கோரிக்கை நிறைவேறும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post