சென்னையில், நடப்பு கல்வியாண்டியில் 28 மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே 22 மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தயாராக உள்ளன.
ஜுன் மாதம் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், அதற்குள் மீதமுள்ள பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்மார்ட் வகுப்பறையில், டிஜிட்டல் திரை, வைபை வசதி, ஸ்பீக்கர் உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெறும்.மாணவர்களுக்கு டேப்லேட்டும் வழங்கப்பட இருக்கிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment