Title of the document

நாளை தேசிய குடற்புழு நீக்க நாளாக அறிவிக்கப்பட்டு, பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்தியாவில், 1 முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகளில், 24.1 கோடி பேருக்கு குடற்புழு தொற்று அபாயம் இருப்பதாக, உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிந்துள்ளது. 

இதனால், ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும், பசியின்மை, வாந்தி, வயிற்று வலி, வயிற்று போக்கு, வைட்டமின், 'ஏ' சத்து குறைவு ஏற்படுகிறது.இதை தவிர்க்க, நாளை, நாடு முழுவதும் அங்கன்வாடி மையம், பள்ளிகளில் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post