Title of the document


ஞாயிறு, 13 நவ 2016
‘இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.29 மணிக்கு பவுர்ணமி தொடங்கி நாளை (திங்கட்கிழமை) இரவு 8.09 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது’ என்று திருவண்ணாமலை அருணாசலஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், இன்று இரவு தோன்றும் நிலவு வழக்கமானதை விட மிகப்பெரியதாக காட்சி அளிக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர் நிலவு’ இன்று (திங்கட்கிழமை) தெரியும். இதனை நாம் வெறும் கண்களாலேயே பார்க்கலாம். பூமியின் ஒரே துணைக்கோளான நிலா வழக்கத்தை காட்டிலும் சற்று பெரியதாக காட்சி அளிப்பதுதான் ‘சூப்பர் நிலவு’. இந்த அதிசய நிகழ்வில் நிலா வழக்கத்தை விட 14 சதவிகிதம் பெரியதாகவும், 30 சதவிகிதம் அதிக ஒளியுடனும் பிரகாசமாக தோன்றும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பூமியில் இருந்து சுமார் 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலா, அதன் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. ‘சூப்பர் நிலவு’ ஏற்படும்போது 48,000 கிலோ மீட்டர் தூரம் நிலா பூமிக்கு அருகில் வந்து செல்லும். அதனாலேயே இந்த அதிசய நிகழ்வின்போது நிலா சற்று பெரியதாகவும், கூடுதல் ஒளியுடனும் காணப்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த 1948ஆம் ஆண்டு சூப்பர் நிலவு தோன்றியதாகவும், அதன் பின்னர் இன்று மீண்டும் தோன்ற உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் நிலா எப்படி இருக்கும்? என்ற படத்தையும் நாசா வெளியிட்டு உள்ளது. (பார்க்க படம்) இந்தியாவில் வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் வெறும் கண்களாலேயே சூப்பர் நிலவை பார்க்கலாம். தொலைநோக்கி மூலமாகவும் பார்த்து ரசிக்கலாம். அதிக ஒளியுடன் இருப்பதால் நிலா சிவப்பு நிறத்தில் தெரியும். இன்று சூப்பர் நிலவை பார்க்க முடியாவிட்டால் கவலைப்பட வேண்டாம். அடுத்த மாதம் (டிசம்பர்) 14ஆம் தேதி மீண்டும் சூப்பர் நிலவு நிகழும். அதனை பார்த்துக்கொள்ளலாம். இதுவும் பெரியதாகதான் இருக்கும். அதனையும் பார்க்காவிட்டால், அடுத்த ஆண்டு (2017) டிசம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post