Title of the document


பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசியக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு:

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் தேசிய கொடியை பிளாஸ்டிக் தாளில் அரசு விழாக்களில் பயன்படுத்த கூடாது. தேசிய கொடியை பயன்படுத்திய பின்னர் தரையில் போடுவதோ, அல்லது தகாத முறையில் பயன்படுத்துவதோ கூடாது. தேசிய கொடி மற்றும் அரசு சின்னங்களை பயன்படுத்த தகுதி இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த தகவலை உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم