Title of the document


                        தருமபுரியில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இந்திய மாணவர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 10-ஆவது மாநாடு சிஐடியூ அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.                  மாவட்டத் தலைவர் ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் எஸ்.இளையமதி வரவேற்றார். மாநிலச் செயலர் பி.உச்சிமாகாளி தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலர் ஏ.பிரசாந்த் குமார் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். முன்னாள் தலைவர் எம்.மாரிமுத்து, மாநிலத் துணைத் தலைவர் ஏ.டி.கண்ணன் ஆகியோர் பேசினர்.

 முன்னதாக எஸ்.வி. சாலையில் உள்ள காந்தி சிலை அருகிலிருந்து பல்வேறு வீதிகள் வழியாக மாணவர்கள் பேரணியாக வந்து மாநாடு நடைபெறும் இடத்தை அடைந்தனர்.

 மாநாட்டில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும்.

 அரசுப் பள்ளி, கல்லூரிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ள தருமபுரி டாக்டர் அம்பேத்கர் அரசுக் கல்லூரி மாணவர் விடுதியை புதுப்பித்து கட்டவேண்டும்.

 பைசுஅள்ளி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்.

 தருமபுரியில் அரசு சட்டக் கல்லூரி மற்றும் பிற்பட்டோருக்கான அரசுக் கல்லூரி விடுதி அமைக்க வேண்டும். அரசாணை எண். 92-ஐ அமல்படுத்த வேண்டும். அரசு விடுதி மாணவர்களின் உணவுப் படியை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 மாநாட்டில், சங்கத்தின் மாவட்டத் தலைவராக பி.எம்.சசிகுமார், மாவட்டச் செயலராக எஸ்.இளையமதி உள்ளிட்ட 20 பேர் கொண்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post