Title of the document


சென்னை : காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை கண்டித்து செப்டம்பர் 16ம் தேதி தமிழகத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த போராட்டத்திற்கு திமுக, பா.ஜ., காங்., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர் சங்கங்கள், லாரி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்டவைகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. செப்டம்பர் 16ம் தேதி கடையடைப்பு போராட்டத்திற்கு பால் விநியோகஸ்தர் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளதால், அன்று தமிழகத்தில் பால் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் போராட்டத்திற்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் 4600 பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post