Title of the document

பி.எட். படிப்புக்கான கட்-ஆப் பட்டியல் ஆகஸ்டு 17-ம் தேதி (புதன்கிழமை) வெளியிடப் படுகிறது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு 22-ம் தேதி தொடங்கி 30 வரை சென்னையில் நடைபெற உள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிக ளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,777 பி.எட். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்த ஆண்டு பி.எட்.படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர 3,736 மாணவர்கள் விண்ணப்பித் துள்ளனர். பி.எட். கட்-ஆப் பட்டியல் வெளியீடு மற்றும் கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளரும், சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வருமான பேராசிரியை எம்.தில்லை நாயகி கூறியதாவது:பி.எட். கலந்தாய்வு ஆகஸ்டு 22-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற உள்ளது.கலந்தாய்வுக்கான அழைப் புக் கடிதம் சனிக்கிழமை (இன்று) முதல் மாணவ-மாணவிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்படும். மேலும், கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரி விக்கப்படும். கட்-ஆப் பட்டியல் 17-ம் தேதி (புதன்கிழமை) லேடி வெலிங்டன் கல்வியியல் மேம் பாட்டு நிறுவன இணையதளத் தில் (www.ladywillingdoniase.com) வெளியிடப்படும்.இவ்வாறு பேராசிரியை தில்லை நாயகி கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post