Title of the document

நல்லாசிரியர் விருது பெற ஜூலை 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தினவிழாவில் 2015 -16 ஆம் ஆண்டுக்குரிய மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது 2015 பெற தலைமையாசிரியராகயிருந்தால், 20 வருட பணி, பிற ஆசிரியர்கள் 15 வருட பணி முடித்த தகுதி வாய்ந்த தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணி புரியும் தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிபவங்களை மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களிடம் வரும் 20 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post