பத்தாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், மறுகூட்டலுக்கு இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள், சில நாட்கள் முன் பொதுத்தேர்வை எழுதியிருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள், நேற்று வெளி யானது.இத்தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இன்றும், நாளையும், பதிவு செய்து கொள்ளலாம்.இத்தகவலை, முதன்மைக் கல்வி அலுவலர், ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்து உள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment