Title of the document
ஆய்வக உதவியாளர், உரிமையியல் நீதிபதி ஆகிய பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளில் அடங்கிய பணிகள், தமிழ்நாடு தடய அறிவியல் துறை சார்நிலை பணிகளில் அடங்கிய ஆய்வக உதவியாளர், தமிழ்நாடு மாநில  நீதித்துறை பணிகளில் அடங்கிய உரிமையியல் நீதிபதிகள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் பல்வேறு தேதிகளில் நடத்தப்பட்டன.
இத்தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள்  பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், எழுத்துத்தேர்வின் முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பிற்கான விண்ணபப்தாரர்களின்  சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வதற்கு மற்றும் நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in)  வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post